என் மலர்
- குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- பாலம்பூர், ஜோகிந்தர்நகர், நஹான் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பதிவாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் நிகழ்ந்துள்ளது.
பார்வதி நதி ஆபத்தான அளவில் நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் ஏற்பட்ட நிலச்சரிவு அந்தப் பாதையில் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது.
வெள்ளம் காரணமாக காங்கிரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 20 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குல்லுவில் 3 பேர் மாயமாகியுள்ளனர்.
நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை உருகியதால் காசா-சம்தூ சாலை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
பாலம்பூர், ஜோகிந்தர்நகர், நஹான் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பதிவாகியுள்ளது.
காங்கிரா, மண்டி, சிம்லா, சிர்மௌர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
- ராஜ்குமார் (37) ரன்களிலும், ஜாபர் ஜமால் (17) ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டகாரர் வசீம் அகமது 2 ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் 44 ரன்களிலும் விக்கெட் விட்டனர். அடுத்து வந்தவர்களும் மதுரையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இருப்பினும் ராஜ்குமார் - ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ராஜ்குமார் (37) ரன்களிலும், ஜாபர் ஜமால் (17) ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 18.1 ஓவரில் திருச்சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மதுரை அணி சார்பில் தாமரை கண்ணன், மெய்யப்பன் தலா 2 விக்கெட்டுகளையும், சரவணன், குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
- சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.
- பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது.
பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூரை மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்கே, "சசி தரூரின் மொழி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் அவர் காங்கிரஸ் காரியக் குழுவில் தக்கவைக்கப்பட்டுள்ளார். நாங்கள் நாட்டிற்காக ஒன்றாக நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரிலும் நாங்கள் ஒன்றாக நின்றோம். நாடு எங்களுக்குப் பெரியது.
நாடு முதலில் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு மோடி பெரியவர். நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று கூறினார்.
கடந்த சில மாதங்களாக பிரதமரைப் புகழ்ந்து சசி தரூர் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். தி இந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமரிடம் இணையற்ற ஆற்றல் இருப்பதாகவும், அவர் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு சொத்து என்றும் குறிப்பிட்டார். சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.
சசி தரூர் மோடியைப் புகழ்ந்தது அவர் பாஜகவுக்கு தாவுவதற்கான அறிகுறி என்று பல ஊகங்கள் இருந்தன. ஆனால் சசி தரூர் அதை நிராகரித்தார்.
கார்கேவின் கருத்துகளைத் தொடர்ந்து, தரூர் தனது எக்ஸ் பதிவில், ஒரு பறவையின் படத்தைப் பகிர்ந்து,"'பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது, வானம் யாருக்கும் சொந்தம் அல்ல" என்று குறிப்பிட்டுளார்.
- ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
- சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.
உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தௌர்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
அப்போது மிஹிலால் என்ற 35 வயது தொழிலாளி தனது உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையுடன் கடுமையாகப் போராடினார். சிறுத்தையை கீழே தள்ளி அதன் வாயை இறுக்கமாகப் பிடிக்க முயன்றார்.
மிஹிலால் சிறுத்தையை எதிர்கொள்வதைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.
இறுதியில் சிறுத்தை அருகிலுள்ள விவசாய வயல்களுக்குள் தப்பி ஓடியது. தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.
சிறுத்தை தாக்குதலில் மிஹிலால் மற்றும் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
- 'ஹிட் 3' படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து நடிகர் கார்த்தி படம் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் கார்த்திக்கு 29 திரைப்படமாகும். அதனால், இப்படத்தை கார்த்தி 29 என்று அழைக்கப்படுகிறது.
படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு குழு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதில் ஒரு கப்பல் கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கார்த்தி நடிகர் நானியில் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எக்ஸ் தள பதிவில் கனவே என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றுடன் விரைவில்.. காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.
இதனால், இது கார்த்தி 29 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- பறந்து போ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
- பறந்து போ படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
இந்நிலையில் பறந்து போ படத்தில் ஆடியோ மற்றும் டிரெயிலர் நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மாலை 5 மணிக்கு பறந்து போ படத்தின் ஆடியோ- டிரெயிலர் வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மதுரை அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
திருநெல்வேலி:
டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
- சென்னையில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை.
- மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் 27.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆலந்தூர்: மேட்டுப்பாளையம், சந்திரன் தெரு, வண்டிக்காரன் சாலை, கோபாலகிருஷ்ணன் தெரு, விக்னேஷ்வரா தெரு, புது தெரு, மசூதி காலனி, பிள்ளையார் கோயில் தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, சாத்தானிபேட்டை 1வது தெரு, செங்கேனியம்மன் கோயில் 1வது தெரு, மார்கோ தெரு, மதுரை 3வது தெரு, மார்கோ தெரு, 3வது தெரு. புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, மண்டி தெரு, நிதி பள்ளி தெரு, லப்பை தெரு, வேளச்சேரி சாலை, வேதகிரி தெரு சந்தை.
நந்தம்பாக்கம்: செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் கோயில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்.
கொரட்டூர்: சுந்தர் தெரு, குபேரகணபதி தெரு, விஓசி தெரு, திருவள்ளுவர் தெரு, வர்னினர் தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, காக்கப்பள்ளம், எம்டிஎச் சாலை, ராஜா தெரு, டிஎம்பி நகர், அவ்வை தெரு, மாரியம்மன் கோயில் தெரு.
அடையாறு: சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டிஏ.என்கிளேவ் ஆப்., விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு, ராம் நகர் 1 முதல் 7வது தெரு, பை பாஸ் மெயின் ரோடு,அக்ஷ்யம் ஹோட்டல் முதல் மஹிந்திரா ஷோ ரூம் வரை.
கோட்டூர்புரம்: ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபாணி 1 முதல் 2வது தெரு.
கே.கே.நகர்: கே.கே.நகர் 1 முதல் 12 செக்டார், ராஜாமன்னார் சாலை, ராமசுவாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசபாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1,9,11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 அடி சாலை.
பல்லாவரம்: 15 முதல் 16 தெரு புதிய காலனி, ஜிஎச், பிஎஸ்என்எல், மும்மூர்த்தி நகர், தர்கா சாலை, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஹைவே நகர், கரேட் வூஃப் நகர் ஒரு பகுதி, ஆபிசர் லேன், வீரன் சந்து, ராம் லிங்கம் தெரு, ஹரியன் நகர், ராணுவ முகாம், மல்லிகா தெரு, ராணுவ முகாம் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு.
ஆவடி: ஜே.பி நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கிரின் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஓரகடம் சொசைட்டி.
சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி பிக், ஆக்சிஜன் நகர் மரம், ஆத்தினி தெரு, ரேடியன்ஸ் மெர்குரி.
துரைப்பாக்கம்: ராஜு நகர், மேட்டுக்குப்பம், விஓசி தெரு, பிடிசி குடியிருப்பு, ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி கார்டன், சௌடேஸ்வரி நகர், சிடிஎஸ், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி, சேரி பகுதி சாலை, ஓஎம்ஆர், எம்ஜிஆர் தெரு, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி.
போரூர்: ஐயப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், தக்ஷின் அபார்ட்மெண்ட், குப்புசாமி நகர், அருணாசலம் ரோடு, காடுவெட்டி,வீரராகவபுரம் ,ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
சீனாவின் சாண்டோங் மாகாணம் குயிங்தவோ நகரத்திற்கு விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங்கை சீன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
சீனா சென்றுள்ள ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- முதல் டெஸ்டில் 0 மற்றும் 30 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
- 5ஆவது நாள் பீல்டிங் செய்தபோது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இது கை வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.
முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன அவர், 2ஆவது இன்னிங்சில் 30 ரன்கள் சேர்த்தார். முதல் போட்டியின் 5ஆவது நாள் ஆட்டத்தின்போது பீல்டிங் செய்யும்போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குள் காயம் சரியாகிவிட்டால், ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, 2ஆவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.