என் மலர்tooltip icon
    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியானது 'குபேரா' திரைப்படம்
    • குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
    • மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

    காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது.

    காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான அல்பானீஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

    அண்மையில் அவர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்த அறிக்கையில் காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

    இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள், அதன் மூலம் லாபம் ஈட்டிய பெறுநிறுவனங்கள், அதன் நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்து குற்றவியல் விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தினார். எனவே அல்பானீஸை மவுனமாக்க டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக "அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக" குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

    இதன்மூலம் அமெரிக்காவில் அல்பானீஸ் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. மேலும் அவர் நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடை குறித்த செய்தி வெளியிடப்பட்ட பிறகு, எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு என்று அல்பானீஸ் கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்தார்.

    • கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படம்
    • பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கின்றனர்.

    நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான புதிய திரைப்படம்

    பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்

    திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது.

    நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்' திரைப்படத்தை இயக்கியவரும், 'கோமாளி', 'கைதி', 'விஐபி 2', 'இமைக்கா நொடிகள்', மற்றும் 'கீ' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்களையும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், "காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருப்பவர் பாக்யராஜ் சார் தான். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்," என்றார்.

    இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கவனிக்கிறார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். ஆடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு - எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.

    திரைப்படம் குறித்த மேலும் சுவாரசிய தகவல்கள் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும். 

    • நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுக்கான டிராப் நிகழ்வை நடத்துவது இது முதல் முறை அல்ல.
    • கடந்த ஆண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நத்திங் போன் 2a மாடலுக்கும் டிராப் சலுகையை நத்திங் அறிவித்தது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3 மாடல் ஜூலை 15 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும், நிறுவனம் இந்தியாவிற்கான பிரத்யேக டிராப் நிகழ்வை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனின் அனுபவத்தை முன்கூட்டியே வழங்கும்.

    இதுதவிர அதன் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு முன்னதாக ஸ்மார்ட்போனை வாங்கவும் வாய்ப்பளிக்கும். பெங்களூருவில் நடைபெற உள்ள நிகழ்வில் நத்திங் போன் 3 மாடலை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹெட்ஃபோன் 1 மாடலை இலவசமாக பெற முடியும்.

    சலுகை விவரங்கள்:

    ஜூலை 12-ம் தேதி (நாளை) மாலை 7 மணிக்கு பெங்களூருவின் யுபி சிட்டியில் நத்திங் போன் 3 மாடலுக்கான இந்தியாவிற்கான பிரத்யேக டிராப் நிகழ்வு நடைபெற இருக்கிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நுழைவு வழங்கப்படும்.

    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு, அதன் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்கவும், அதை நேரடியாகப் பயன்படுத்தவும் விருந்தினர்களுக்கு நத்திங் போன் 3 இந்தியா டிராப் நிகழ்வு வாய்ப்பளிக்கும். இதுமட்டுமின்றி அவர்கள் ஒரு போட்டியிலும் பங்கேற்கலாம்.

    அதைத் தொடர்ந்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் ரூ. 21,999 மதிப்புள்ள நத்திங் ஹெட்ஃபோன் 1 ஐ வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நிகழ்வின் மிகப்பெரிய சிறப்பம்சம் நத்திங் போன் 3 கிடைப்பதுதான்.

    இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் விற்பனைக்கு வருவதற்கு முன்பு விருந்தினர்கள் இந்த போனை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இது காத்திருப்புப் பட்டியல்களுக்குப் பதிவு செய்வதையோ அல்லது கைபேசியை முன்கூட்டியே ஆர்டர் செய்வதையோ நீக்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுக்கான டிராப் நிகழ்வை நடத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நத்திங் போன் 2a மாடலுக்கும் டிராப் சலுகையை நத்திங் அறிவித்தது.

    கடந்த மார்ச் மாதத்தில் நத்திங் போன் 3a சீரிசுக்கான வெளியீட்டு நிகழ்வையும் நத்திங் நடத்தியது. உலகில் உள்ள வேறு எவருக்கும் முன்பே நத்திங் கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க இந்த டிராப் நிகழ்வு அழைப்பு விடுத்தது.

    • புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது.
    • கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.

    புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் ஐயோனிக் 6 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. இருப்பினும், அந்த நேரத்தில் வரவிருக்கும் N மாறுபாட்டின் விவரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N மாடலின் டீசர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் மாடலை ஹூண்டாய் நிறுவனம் "குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு" நிகழ்வில் வைத்து அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    தோற்றத்தின் அடிப்படையில், 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 6 மாடலை போன்ற தோற்றம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புதிய நேர்த்தியான ஹெட்லைட்களும் அடங்கும். இந்த மாடலில் புதிதாக N பேட்ஜுடன், இப்போது அகலமான ஃபெண்டர்கள் மற்றும் ஸ்வான் நெக் பின்புற இறக்கை பெறுகிறது.

    புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது. ஆக்ரோஷமான தோற்றத்திற்கு மேலும் வலுசேர்க்க, ஃபெண்டர்கள் விரிவடைந்துள்ளன. இவற்றுடன் பெர்ஃபாமன்ஸ் ப்ளூ பேர்ல் ஷேடோ ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஐயோனிக் 5 N உடன் அதன் பவர்டிரெய்னைப் பகிர்ந்து கொள்ளும் இந்த கார், ஆல்-வீல்-டிரைவ் பவர்டிரெய்ன் மற்றும் 601 hp பவர் வெளிப்படுத்துகிறது. இது போதாது என்றால், காரில் N க்ரின் பூஸ்ட் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.



    இது 84 kWh பேட்டரி பேக்கிலிருந்து அதிக திறனை உறிஞ்சும் அதே வேளையில் 10 வினாடிகளுக்கு 641 hp ஆக வெளியீட்டை அதிகரிக்கிறது. பயன்படுத்தப்படும்போது, இந்த செடான் 3.2 வினாடிகளில் நின்றுகொண்டிருக்கும் நிலையிலிருந்து மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை அடைகிறது. இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரியை 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

    வேகத்தைக் கட்டுப்படுத்த, ஹூண்டாய் ஐயோனிக் 6 N நான்கு-பிஸ்டன் முன் காலிப்பர்களையும், பின்புறத்தில் முறையே 15.7 மற்றும் 14.1-இன்ச் ரோட்டர்களுடன் கூடிய ஒற்றை-பிஸ்டன் யூனிட்டையும் பெறுகிறது.

    • பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள்.
    • இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?

    சென்னை ஐஐடி-யில் 62-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் கூறியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏதும் தவறவில்லை.

    எல்லைத் தாண்டிய மிரட்டலை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. தொழில்நுட்ப வசதி திறனும் உள்ளது.

    அதன் பிறகு, பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள். இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?

    இவ்வாறு அஜித் தோவல் கூறினார்.

    • பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம்.
    • அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம்.

    ஆடி முதல் ஞாயிறு நெருங்கிவிட்டது. இப்போதே திருமணமான பெண்கள் கணவன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றும் கன்னிப்பெண்கள் வருங்கால கணவர் நல்லவராகவும், மனதிற்கு பிடித்தவராகவும் எந்தவித தோஷங்களும் இருக்கக் கூடாது என்றும் விரதமிருந்து வேண்டிக்கொள்வதற்காக சுமங்கலி பூஜைக்கு ஆயத்தமாகி இருப்பர்.

    பெரும்பாலான பெண்கள் சுங்கலி பூஜை எப்படி செய்ய வேண்டும், அம்பிகையை விரதமிருந்து வழிபடும் முறை முதலானவற்றை தெரிந்து வைத்திருப்பர். ஆனால், சுமங்கலி பூஜையின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்திருக்கமாட்டார்கள். அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்...

    சுமங்கலி பூஜையின் போதும் சரி, பொதுவாக அன்றாடம் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைக்கும் போதும் சரி "ஓம் தீர்க்க சுமங்கலி தேவியை, இரட்சிப்பாய் இரட்சிப்பாய்" என்ற இந்த மந்திரத்தை மனதார சொன்னாலே போதும்.

    நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கும் போது, "ஓம் மஹிமா சக்தியை திலக தேவியை பூரண சக்திதா நமோ நமஹ" என்ற மந்திரத்தையும்,

    நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போது, " ஓம் யாதேவி சர்வ பூதேஷூ ஸ்ரீம் ஐம் க்லீம் சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை யோகம் இரட்சிப்பாய் இரட்சியப்பாய் நமோ நமஹ"என உச்சரிக்க கணவரின் ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.

    சுமங்கலி பூஜை செய்வதற்கு உகந்த நேரம்:

    காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை சுமங்கலி பூஜை செய்யலாம். பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம். காலையில் சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து, சுமங்கலி பெண்களுக்கு இரவு உணவு பரிமாறலாம். சுமங்கலி பூஜையை ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய முடியாதவர்கள் ஆடி வெள்ளி நாளிலும் செய்து பலன் பெறலாம்.

    சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள், பூஜையறையில் ஒரு மனை போட்டு, மாக்கோலமிட்டு, அந்த மனையில் அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம். அவ்வாறு வழிபடும் போது நித்திய சுமங்கலியான தாயே, உன் மகளான எனக்கும் நித்திய சுமங்கலி வரத்தை தந்தருள வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். அந்த அன்னையின் அருள் என்றென்றும் உங்களோடு நிலைத்திருக்கும்.

    • தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.

    மதுரை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நாளை (12-ந் தேதி) தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக அதிகாரிகள் தனியார் பஸ்சின் கதவுகளுக்கு சீல் வைத்த சம்பவம் விநோதமாக இருந்தது. வழக்கமாக அரசு தேர்வின்போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வின்போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு ஏ4 பேப்பர் சீட் ஒட்டி சீல்வைத்து பாதுகாப்பு என கூறி வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
    • இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

    மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டனர்.

    அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

    • மகாராஷ்டிராவை போன்று, பீகாரிலும் தேர்தலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
    • நாடு முழுவதும் நமது அரசியலமைப்பை பாஜக தாக்கிக் கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மகாராஷ்டிராவை போன்று, பீகாரிலும் தேர்தலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் நமது அரசியலமைப்பை பாஜக தாக்கிக் கொண்டு வருகிறது.

    நேற்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகாரில் தேர்தலை பாஜக அபகரிப்பதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை. பாஜகவின் நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது.

    பாஜக ஐந்து முதல் ஆறு முதலாளிகளுக்காக அரசாங்கத்தை நடத்துகிறது. நாட்டின் பொது மக்களுக்கான பணி செய்யவில்லை.

    "ஜல், ஜங்கல், ஜாமின்" பழங்குடியினருக்கு சொந்தமானது. அவைகைள் அவர்களுக்கே இருக்கும். வன உரிமைப் பட்டாக்கள் பழங்குடியினருக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் PESA மற்றும் பழங்குடி மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்களை நாங்கள் அமல்படுத்துவோம், பழங்குடியினருக்கு அவர்களின் நிலம் கிடைப்பதை உறுதி செய்வோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    ×